» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி சிவன் கோவிலில் குவிந்த மணமக்கள் - உறவினர்கள் : ஒரே நாளில் 18 திருமணங்கள்!
புதன் 28, மே 2025 12:20:38 PM (IST)
தூத்துக்குடி சிவன் கோவிலில் இன்று 18 திருமணங்கள் நடைபெற்றது. ஆலய வளாகம் முழுவதும் புதுமண தம்பதிகள் மற்றும் உறவினர்களின் கூட்டம் அலைமோதியது.
இன்று வைகாசி மாத வளர்பிறை சுப முகூர்த்த தினம் இதை முன்னிட்டு தூத்துக்குடியில் அமைந்துள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதி முன்பு இன்று ஒரே நாளில் 18 திருமணங்கள் நடைபெற்றன.
மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இந்த திருமணங்களால் ஆலய வளாகம் முழுவதும் பட்டு வேட்டி சேலையுடன் மாலைகளை அணிந்தபடி திருமணம் நடைபெற்ற புதுமண தம்பதிகளின் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்த உறவினர்களின் கூட்டத்தால் ஆலயம் முழுவதும் நிரப்பி காணப்பட்டது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்து தங்களது குடும்பத் திருமண நிகழ்வில் ஆலயத்தில் கலந்து கொண்டதால் அனைவரும் முகத்திலும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியும் காணப்பட்டது. இதனால் ஆலய வளாக பகுதி முழுவதும் விழாக்கோலம் போல் காணப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
வியாழன் 29, மே 2025 4:59:01 PM (IST)

மதுரை மேயரின் கணவர் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்ட்!
வியாழன் 29, மே 2025 4:25:21 PM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண் பாலியல் புகார் : வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
வியாழன் 29, மே 2025 3:41:33 PM (IST)

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்
வியாழன் 29, மே 2025 3:11:27 PM (IST)

கமலுக்கு கன்னட அமைப்புகள் மிரட்டல்; முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? சீமான் கேள்வி
வியாழன் 29, மே 2025 12:36:32 PM (IST)
