» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்மேற்கு பருவமழை பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்: ஆட்சியர்
புதன் 28, மே 2025 3:21:25 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழை குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (28.05.2025) வெளியிட்டுள்ள தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த 23.05.2025 அன்று முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
பலத்த காற்றின் வாயிலாக மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் வீடுகள் இடிந்து, தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து துறை அலுவலர்களும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 28.05.2025 முதல் 31.05.2025 வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மன்னர் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 23.05.2025 முதல் 27.05.2025 வரை திருவட்டார் வட்டத்தில் 1 நபர் உயிரிழந்துள்ளார். 2 நபர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் 47 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 43 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 வீடுகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பலத்த காற்றினால் தோட்டக்கலை பயிர்கள் 37.10 ஹெக்டெர் தோட்டக்கலை பயிர்களும், 20 ஹெக்டர் வேளாண் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 23.05.2025 முதல் 27.05.2025 வரை 336 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இதில் 292 மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 44 மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 94 மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தது. அதனை தீயணைப்பு துறையினரால் முறிந்த அனைத்து மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டுள்ளது. 575 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றுள்ளனர். இவர்களில் 548 மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். மீதமுள்ள 27 மீனவர்கள் கரை திரும்ப தகவல் பரிமாற்றம் மீன்வளத்துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 48 அடி கொள்ளவு கொண்டது. தற்போதைய நீர் மட்டம் 39.84 அடி கனமழையின் காரணமாக 3014 கனஅடி நீர் அணைக்கு வரப்பெற்றுள்ளது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 77 அடி கொள்ளவு கொண்டது. தற்போதைய நீர் மட்டம் 47.60 அடி கனமழையின் காரணமாக 2384 கனஅடி நீர் அணைக்கு வரப்பெற்றுள்ளது. இதில் 22 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் தங்கள் கட்டுமரம், மீன்பிடி படகு போன்றவற்றை பாதுகாப்பாக நிலை நிறுத்திடவும், கடலுக்குள் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு அவ்வப்போது உதவி இயக்குநர், மீன்வளத்துறை அவர்களால் வழங்கப்படும் எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் இருக்கும் மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என்றும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்த்திடுவோம். பொதுமக்கள் கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
வியாழன் 29, மே 2025 4:59:01 PM (IST)

மதுரை மேயரின் கணவர் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்ட்!
வியாழன் 29, மே 2025 4:25:21 PM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண் பாலியல் புகார் : வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
வியாழன் 29, மே 2025 3:41:33 PM (IST)

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்
வியாழன் 29, மே 2025 3:11:27 PM (IST)

கமலுக்கு கன்னட அமைப்புகள் மிரட்டல்; முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? சீமான் கேள்வி
வியாழன் 29, மே 2025 12:36:32 PM (IST)
