» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

புதன் 28, மே 2025 9:57:52 PM (IST)

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சால்வன்துரை தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சியில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருபவர் முருகன். புதிய வீடு கட்டுவதற்கு கட்டட அனுமதி வழங்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டுள்ளார். திருவட்டார் தாலுகா வியன்னூர் அஞ்சல் ஏற்ற கோடு மணலித்தறவிளையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகன் சுபின். 

இவர் புதிய வீடு ஒன்றை கட்டுவதற்காக கட்டட வரைபட அனுமதி கேட்டு ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் முருகன் என்பவர் தானே செயல் அலுவலர் என நடித்து கட்டட வரைபட அனுமதி வழங்க கடந்த 26 ஆம் தேதி ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபின் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு பிரிவினர் ஐந்தாயிரம் ரூபாய் ரசாயனம் பூசிய பணத்தை சுபினிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். 

ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து இன்று 28-05-2025 மாலை 4 .15 மணிக்கு செயல் அலுவலராக நடித்த பில் கலெக்டர் முருகனிடம் கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த  லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சால்வன்துரை தலைமையிலான போலீசார் பாய்ந்து சென்று பிடித்தனர். தற்போது தொடர் விசாரணை நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory