» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரும் போராட்டம்: அண்ணாமலை ஆதரவு
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 3:56:55 PM (IST)
பொட்டலூரணியில் உள்ள மீன் கழிவு ஆலைகளை மூட வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மூன்று மீன் கழிவு ஆலைகளால், கடந்த நான்கு ஆண்டுகளாக, அந்தப் பகுதியில் மண்வளம், நிலத்தடி நீர் மற்றும் காற்று ஆகியவை மாசுபட்டு, பொதுமக்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த ஆலைகளை மூடக்கோரி, பலமுறை கோரிக்கை விடுத்தும், திமுக அரசு கண்டுகொள்ளாததால், கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலையும் புறக்கணித்து, போராட்டம் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்கள், இளைஞர்கள் மீதே திமுக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனை அடுத்து, கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல், சுமார் 450 நாட்களுக்கும் மேலாக, சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூடக் கோரி, பொட்டலூரணி பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனால், திமுக அரசோ, அமைச்சர்களோ, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களோ, யாரும் இந்த மக்களைக் கண்டுகொள்ளவில்லை. காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கும் திமுகவின் செயல்பாடு வன்மையான கண்டனத்துக்குரியது.
தனது கட்சிக்காரர்கள் சம்பாதிக்க, பொதுமக்கள் நல்வாழ்வைப் பணயம் வைக்கும் அலட்சியப் போக்கை, முதலமைச்சர் திரு @mkstalin நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, பொட்டலூரணி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:46:51 PM (IST)

நாகர்கோவில் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை : எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதன் 13, ஆகஸ்ட் 2025 12:31:22 PM (IST)

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் சம்பவம் குறித்து உரிய விசாரணை : இபிஎஸ் வலியுறுத்தல்!
புதன் 13, ஆகஸ்ட் 2025 12:01:11 PM (IST)

திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு: ரஜினிக்கு துணை முதல்வர், முன்னாள் முதல்வர் வாழ்த்து
புதன் 13, ஆகஸ்ட் 2025 11:22:10 AM (IST)

தூத்துக்குடியில் நிதி நிறுவனத்தில் ரூ.6லட்சம் பணம் கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை
புதன் 13, ஆகஸ்ட் 2025 10:57:48 AM (IST)

மாநகராட்சியில் முறைகேடு: கைதான மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி!
புதன் 13, ஆகஸ்ட் 2025 10:53:46 AM (IST)
