» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் பொய்கை அணை திறப்பு: 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

செவ்வாய் 18, நவம்பர் 2025 8:58:05 PM (IST)



குமரி மாவட்டத்தில் விவசாய நிலங்களின் பாசன பயன்பாட்டிற்காக ஆரல்வாய்மொழி பொய்கை அணையிலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பொய்கை அணையிலிருந்து, தண்ணீர் திறந்து விட்டார்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய நிலங்களின் பாசன பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (18.11.2025) ஆரல்வாய்மொழி பொய்கை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், ஆரல்வாய்மொழி கிராமத்தில் அமைந்துள்ள பொய்கை அணையிலிருந்து, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்ட பாசன நிலங்களுக்கு இன்று (18.11.2025) முதல் 03.12.2025 வரை 16 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டங்களில் உள்ள ஆரல்வாய்மொழி, குமாரபுரம் மற்றும் பழவூர் கிராமங்களில் உள்ள 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார். 

நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் நீர்வளத்துறை அருள்சன் பிரைட், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜென்கின் பிரபாகர், உதவி செயற்பொறியாளர்கள் வல்சன் போஸ், அஜீஸ், கோதையாறு நீர்பாசன தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory