» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடலில் மூழ்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு: சோகத்தில் மூழ்கிய தருவைகுளம் கிராமம்!

திங்கள் 27, ஜூலை 2026 10:11:53 AM (IST)

seamOolki.jpg

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடலில் குளித்தபோது மாயமான இரண்டு மாணவர்களும் பாறைக்கு இடையே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில் இருந்து படகில் சென்று கடலில் குளித்தபோது, படகு கட்டுப்பாட்டை இழந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டதில் இரு மாணவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர். மாயமான மாணவர்களைத் தேடும் பணி நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது.இன்று காலை சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் ஆழ்கடலுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தருவைகுளம் கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கடலடிப் பாறைக்கு இடையே இரு மாணவர்களும் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. உடனடியாகச் சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

தகவலறிந்த தருவைகுளம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றினர். பின்னர் உடற்கூறாய்விற்காக இருவரின் சடலங்களும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் இச்சம்பவம் குறித்து மரைன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் தருவைகுளம் கிராம மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory