» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

திங்கள் 27, ஜூலை 2026 12:06:56 PM (IST)

cmvijayRajamuthupandi.jpg

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் சர்வதேச காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி, திறம்படச் செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

சர்வதேச அளவில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாடு வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது இந்தச் சாதனையினைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது இந்த வெற்றி, விளையாட்டுத் துறையில் ஈடுபடும் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்குப் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும். அவர் மேலும் பல சாதனைகளைப் படைத்து இந்தியத் திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory