» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திங்கள் 27, ஜூலை 2026 4:44:50 PM (IST)

SahayamHighcourt.jpg

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு உடனடியாகத் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற ஆணையராகச் செயல்பட்டு, மதுரையில் நடைபெற்ற மாபெரும் கிரானைட் குவாரி ஊழலை வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு விலக்கப்பட்டதால் மனு:

கிரானைட் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு கோரி அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு விசாரணைக்கு வந்தபோது, "எவ்வித முன்அறிவிப்பும் இன்றித் தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது" எனச் சகாயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், "பாதுகாப்பு கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பம், அதுதொடர்பான மறுஆய்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு, வழக்கினை முடித்து வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory