» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 27, ஜூலை 2026 4:44:50 PM (IST)

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு உடனடியாகத் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற ஆணையராகச் செயல்பட்டு, மதுரையில் நடைபெற்ற மாபெரும் கிரானைட் குவாரி ஊழலை வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு விலக்கப்பட்டதால் மனு:
கிரானைட் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு கோரி அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு விசாரணைக்கு வந்தபோது, "எவ்வித முன்அறிவிப்பும் இன்றித் தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது" எனச் சகாயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், "பாதுகாப்பு கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பம், அதுதொடர்பான மறுஆய்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது" எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு, வழக்கினை முடித்து வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.411.51 கோடியாக உயர்வு: முதலாம் காலாண்டில் சாதனை!
திங்கள் 27, ஜூலை 2026 8:46:45 PM (IST)

கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 27, ஜூலை 2026 5:54:38 PM (IST)

ஜூலை 31 முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தம்: வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 5:24:15 PM (IST)

சென்னை மேயர் பிரியாவுக்கு மர்ம நபர் தொல்லை: காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!
திங்கள் 27, ஜூலை 2026 4:23:21 PM (IST)

பாளை சிறையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 3:41:27 PM (IST)

தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 12:06:56 PM (IST)


