» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜூலை 31 முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தம்: வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 5:24:15 PM (IST)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31-ஆம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் காரணமாக இரு மாநிலங்களிலும் கோழிக்கறிக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
கோழி வணிகர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க, தஞ்சாவூரில் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில அவசரச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வணிகர்கள் கலந்துகொண்டனர்.
வணிகர்களின் முக்கியக் கோரிக்கைகள் & குற்றச்சாட்டுகள்:
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் கோரிக்கைகள் வருமாறு:
வழிகாட்டு நெறிமுறைகள்: பிராய்லர் கோழிகளுக்கான தீவனக் கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உடனடியாக அனைத்து மண்டல மற்றும் மாவட்டக் கால்நடைத் துறை அதிகாரிகளுக்கும் தெளிவாக அறிவுறுத்த வேண்டும்.
தீவனக் கட்டுப்பாடு அவசியம்: விற்பனைக்காக அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்குக் குறைந்தது 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
நுகர்வோருக்குப் பண நஷ்டம்: கோழிகளுக்குத் தொடர்ந்து தீவனம் வழங்கப்பட்டால், அவற்றின் இறைப்பையில் 100 கிராம் முதல் 200 கிராம் வரை செரிக்காத தீவனமும் தண்ணீரும் தங்கிவிடும். இதனால் கோழி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வீண் பண நஷ்டம் ஏற்படுகிறது.
இறைச்சி பாழாகும் நிலை: கோழியை வெட்டிச் சுத்தம் செய்யும்போது, இறைப்பையில் உள்ள செரிக்காத தீவனமும் கழிவுகளும் கறியில் சிந்தி இறைச்சியின் சுகாதாரத்தைப் பாழாக்குகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்குச் சுத்தமான இறைச்சியை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை 31-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள சுமார் 60,000 கடைகளில் பிராய்லர் கோழி விற்பனையை நிறுத்தி, அன்டறைய தினம் முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகக் கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.411.51 கோடியாக உயர்வு: முதலாம் காலாண்டில் சாதனை!
திங்கள் 27, ஜூலை 2026 8:46:45 PM (IST)

கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 27, ஜூலை 2026 5:54:38 PM (IST)

சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 27, ஜூலை 2026 4:44:50 PM (IST)

சென்னை மேயர் பிரியாவுக்கு மர்ம நபர் தொல்லை: காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!
திங்கள் 27, ஜூலை 2026 4:23:21 PM (IST)

பாளை சிறையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 3:41:27 PM (IST)

தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 12:06:56 PM (IST)


