» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேளாங்கண்ணி திருவிழா: நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில் இயக்க பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 29, ஜூலை 2026 5:41:23 PM (IST)

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், நெல்லை வழியாக வேளாங்கண்ணிக்குச் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் (KKDRUA) தெற்கு ரயில்வேக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் இறுதி வாரத்தில் தொடங்கிச் செப்டம்பர் முதல் வாரத்தில் நிறைவடைகிறது. இத்திருவிழாவிற்குத் திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் செல்வது வழக்கம்.
தற்போது குமரி மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணிக்குச் செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. திருச்சியில் ரயில் மாறிச் செல்வதற்கும் ஏற்ற இணைப்பு ரயில்கள் கால அட்டவணையில் இல்லாததால், பக்தர்கள் பேருந்துகளிலும் தனியார் வாகனங்களிலுமே சிரமப்பட்டுப் பயணிக்கின்றனர்.
தற்போது இயக்கப்பட்டு வரும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இருமுறை வாராந்திர ரயிலும், மற்றொரு வாராந்திர ரயிலும் புனலூர், செங்கோட்டை வழியாகச் செல்கின்றன. இதனால் திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டப் பயணிகளுக்கு எவ்விதப் பயனும் இல்லை.
முந்தைய ஆண்டுகளில் நாகர்கோவிலில் இருந்து இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலும் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதாலும், மோசமான கால அட்டவணையினாலும் போதிய ஆதரவின்றி ரத்து செய்யப்பட்டது.
பயணிகள் சங்கத்தின் கோரிக்கைகள்:
திருவனந்தபுரம் / கொச்சுவேலி இணைப்பு: திருவனந்தபுரம்/கொச்சுவேலியிலிருந்து நாகர்கோவில் டவுன் வழியாகச் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள குழித்துறை, பாறசாலை, இரணியல் பகுதி மக்களும் பயனடைவர்.
பகல்நேர சிறப்பு ரயில்: திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்குச் செல்லும் வகையில் குறைந்த தூரமும், குறைந்த பயண நேரமும் கொண்ட பகல்நேரச் சிறப்பு ரயில் ஒன்றை அறிவிக்க வேண்டும்.
சிறப்பு ரயில்களை இயக்குவதற்குத் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு (GM) முழு அதிகாரம் உள்ளதால், பயணிகள் சங்கத்தின் இக்கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி : முதலமைச்சரிடம் அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரை!
புதன் 29, ஜூலை 2026 5:10:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து நிலைய பணிகள்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
புதன் 29, ஜூலை 2026 4:12:41 PM (IST)

டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டம்? - தமிழ்நாடு அரசு பரிசீலனை!
புதன் 29, ஜூலை 2026 4:02:08 PM (IST)

தவெக நிர்வாகி மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்காத காவல்துறை - பாஜக கண்டனம்!
புதன் 29, ஜூலை 2026 3:34:02 PM (IST)

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க இளையராஜா அழைப்பு!
புதன் 29, ஜூலை 2026 12:18:38 PM (IST)

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்: செவிலியர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!
புதன் 29, ஜூலை 2026 11:47:56 AM (IST)


