» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் ஆகஸ்ட் 15 முதல் தினசரி குடிநீர் விநியோகம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:25:34 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தினமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தபால் தந்தி காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர், "பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தினமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.எஸ். ராஜா, மாமன்ற உறுப்பினர் இசக்கிராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.1 கோடி பட்டாசு திருட்டு வழக்கு : த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி உள்பட 6 பேர் கைது!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:17:39 PM (IST)

சாதி, மதமற்றவர் சான்றிதழ் கோரி பார்த்திபன் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:12:06 PM (IST)

கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை: ஆட்சியர் பிரதாப் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:35:49 PM (IST)

கோவை - தூத்துக்குடி இடையே விமான சேவை: மத்திய, மாநில அரசுகளுக்கு தொழில்துறையினர் கோரிக்கை!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:51:13 AM (IST)

அரசியல் சூட்டைத் தணித்த கனமழை: தமிழகத்தை நோக்கிப் பொங்கி வரும் காவிரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:39:51 AM (IST)


