» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அம்பையில் பொதுமக்களை அச்சுறுத்திய கரடி பிடிபட்டது...!
செவ்வாய் 20, மே 2025 10:53:26 AM (IST)

அம்பையில் பொதுமக்களை அச்சுறுத்திய கரடியை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்து காரையார் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாட்களாக கரடி சுற்றித்திரிந்தது. இந்த கரடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் வைத்தனர். இந்நிலையில், மணிமுத்தாறு தங்கம்மன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் கரடி இன்று சிக்கியது. இதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி காரையார் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பொதுமக்களை அச்சுறுத்திய கரடி பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இராதாபுரம் வட்டத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆய்வு
புதன் 21, மே 2025 5:44:10 PM (IST)

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
புதன் 21, மே 2025 4:05:17 PM (IST)

அரசு பஸ் கண்டக்டர் கார் ஏற்றி படுகொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3பேர் கைது!
புதன் 21, மே 2025 12:52:59 PM (IST)

உயர்கல்வியினை ஆலோசித்து தேர்வு செய்ய வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவுரை
செவ்வாய் 20, மே 2025 12:03:14 PM (IST)

விபத்தில் பலியான 5 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம்: கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி!!
திங்கள் 19, மே 2025 9:24:45 PM (IST)

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 19, மே 2025 3:24:44 PM (IST)
