» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)
நிலுவை தொகை ரூ.276 கோடி எதிரொலியாக நாங்குநேரி உட்பட தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களை அனுமதிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.276 கோடியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக கூறி மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டுர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், 'சுங்கச்சாவடிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகள் வழியாக 10-ந் தேதி முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது. இந்த சுங்க சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்பிக்கு டி.ஜி.பி. உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சதாவதானி செய்குதம்பி பாவலர் 151-வது பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை செலுத்தினார்!
வியாழன் 31, ஜூலை 2025 12:41:20 PM (IST)

தூத்துக்குடியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 31, ஜூலை 2025 12:16:57 PM (IST)

முழு கிராமத்தையும் அபகரிக்க நினைக்கும் தனியார் நிறுவனம் : போராட்டம் நடத்த அதிமுக முடிவு!!
வியாழன் 31, ஜூலை 2025 11:54:35 AM (IST)

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!
வியாழன் 31, ஜூலை 2025 11:39:04 AM (IST)

ஆணவக் கொலை வழக்கில் கைது செய்வதில் தயக்கம் ஏன்..? திருமாவளவன் கேள்வி
வியாழன் 31, ஜூலை 2025 11:35:19 AM (IST)

ஆணவக் கொலை: கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி ஆறுதல்!!
வியாழன் 31, ஜூலை 2025 11:24:09 AM (IST)
