» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை
வியாழன் 31, ஜூலை 2025 11:04:13 AM (IST)
தூத்துக்குடியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி செல்சினி காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில். பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (37), இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகாலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் மகாலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்வதற்கு விருப்பம் இல்லாததால் மகாலட்சுமி தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாலிபர் கொன்று புதைப்பு..? போலீசார் விசாரணை
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 8:55:06 AM (IST)

காதல் மனைவியை செய்து விட்டு நாடகமாடிய மினிபஸ் டிரைவர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 8:51:00 AM (IST)

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 8:45:24 AM (IST)

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு திருமண உதவி தொகை திட்டம் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 8:26:54 AM (IST)

பாஜகவுடனான உறவு முறிவு: முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு - பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்
வியாழன் 31, ஜூலை 2025 5:32:08 PM (IST)

தூத்துக்குடியில் ஆக.2ஆம் தேதி மாபெரும் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்!!
வியாழன் 31, ஜூலை 2025 5:08:39 PM (IST)
