» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

வியாழன் 31, ஜூலை 2025 11:04:13 AM (IST)

தூத்துக்குடியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி செல்சினி காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில். பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (37), இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகாலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் மகாலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்வதற்கு விருப்பம் இல்லாததால் மகாலட்சுமி தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த  தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  முருகன் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory