» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முழு கிராமத்தையும் அபகரிக்க நினைக்கும் தனியார் நிறுவனம் : போராட்டம் நடத்த அதிமுக முடிவு!!

வியாழன் 31, ஜூலை 2025 11:54:35 AM (IST)

தூத்துக்குடியில் முழு கிராமத்தையும் அபகரிக்க நினைக்கும் தனியார் நிறுவனத்தை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மேற்கு ஒன்றிய அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.பி.தளவாய்புரம் சுப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கே.பி.தளவாய்புரம் கிராமத்தில் சுமார் 300 வீடுகள் உள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக 6 தலைமுறையாக குடியிருந்து வருகிறனர். இந்த கிராமத்தில் இந்திய இராணுவத்தில் 200 பேருக்கு மேல் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

விவசாய தொழிலை நம்பி உள்ள கிராமத்தை முழுமையாக ஒரு தனியார் நிறுவனம் 2022 ம் ஆண்டு முதல் போலியாக ஆவணம் தயார் செய்து, முறைகேடாக பத்திரபதிவு செய்துள்ளது. இதனால் தற்போது கேபி தளவாய்புரம் ஊர் முழுவதும் ஈசியில் டெல்லி உச்சநிதிமன்றம் என்று பதிவு ஆகியுள்ளது. இதனை ஊர் பொதுமக்கள் சார்பாக பல முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் ஊர் பொதுமக்கள் போராட்டக் களத்திற்கு தள்ளி விடப்பட்ட சூழலில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இறுதி முயற்சியாக இது குறித்து ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு சட்டம் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாத்தது போல, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முறையிட்டு தீர்வு காண ஊர் மக்கள் முடிவு செய்து இருந்த நிலையில்,

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற 2026 தமிழக சட்டமன்ற பொது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக அவர் நேரடியாக மக்களை சந்திக்க வருகிற 1ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள தால், அவரை பொதுமக்கள் நேரில் சந்தித்து முறையிட உள்ளனர், இந்த நிலையில் பொது மக்களின் குமுறலுக்கு தீர்வு காண அதிமுக சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே முழு கிராமத்தையும் அபகரிக்க நினைக்கும் தனியார் நிறுவனத்தின் நில அபகரிப்பு செயலைக் கண்டித்து போராட்டம் நடத்த அதிமுக பொதுச்செயலாளரின் அனுமதியை பெற்று ஊர் பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory