» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கழிவுமீன் நிறுவனங்களை அப்புறப்படுத்தும் வரை போராட்டத்தில் துணை நிற்பேன்: கிருஷ்ணசாமி
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 3:23:23 PM (IST)

பொட்டலூரணி கழிவுமீன் நிறுவனங்களை அப்புறப்படுத்தும் போராட்டத்தில் கடைசி வரையும் துணை நிற்பேன் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணியைச் சுற்றிலும் மூன்று கழிவுமீன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்நிறுவனங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக பொதுமக்கள் நான்கு ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம், கூட்டம், பாராளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு, மாதக்கூடல், நாள்கூடல் எனப் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், பொட்டலூரணியில் 451 ஆவது நாள் கூடல் சிறப்பு நிகழ்ச்சி பொறுப்பாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பொறுப்பாளர் இராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். பெருஞ்சித்திரனார் படிப்பகத்தின் பொறுப்பாளர் சங்கரநாராயணன் அறிமுக உரையாற்றினார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவர்தம் உரையில், "பொதுமக்களுக்கு நல்ல காற்றையும் குடிநீரையும் கொடுக்க வேண்டியது அரசின் கடமை ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பாக அதனால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்று ஆராய்ந்து கொடுக்க வேண்டும்.
பொட்டலூரணி மக்கள் மட்டுமல்லாமல் இவ்வட்டாரத்திலுள்ள மக்களையும் இணைத்துக் கொண்டு போராட நடவடிக்கை எடுப்போம். துர்நாற்றம் வீசுகின்ற மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் அப்புறப்படுத்தும் போராட்டத்தில் நான் கடைசி வரையும் துணை நிற்பேன்” என்றார். மாவட்ட செயலாளர் இரமேஷ்குமார், பூவாணி தங்கராஜ், மற்றும் திரளான ஊர்ப் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொறுப்பாளர் பால்ராஜ் நன்றிகூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 5:48:59 PM (IST)

புத்தேரி நான்கு வழி சாலைப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 5:31:36 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் வரமாட்டார் : வழக்கறிஞர் தகவல்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 5:14:35 PM (IST)

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் விரைவில் நலம்பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் பதிவு
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:34:22 PM (IST)

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:32:11 PM (IST)

சுற்றுலா படகு ஆன்லைன் பயணச்சீட்டு பதிவு : அமைச்சர்மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:13:59 PM (IST)
