» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாநில அளவிலான வின்வெளி அறிவியல் மாநாடு தொடக்கம் : இராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பங்கேற்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 3:11:49 PM (IST)

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞர் வானவியல் மற்றும் வின்வெளி அறிவியல் மாநாடு இன்று தொடங்கியது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, இந்திய வான் இயற்பியல் நிறுவனம் பெங்களூரு, இந்திய கணிதவியல் நிறுவனம் சென்னை, தமிழ்நாடு உயர் கல்வி அறிவியல் கழகம், ராமன் ரிச்சர்ச் பவுண்டேஷன், அறிவியல் பலகை ஆகிய அமைப்புகள் இணைந்து சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டின் துவக்க விழாவை நடத்தியது.
மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 17 வயது முதல் 22 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் 10 மண்டலங்களில் மாநாடுகளை நடத்தி அதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகள்,போஸ்டர்கள் தயாரிப்பு, குறும்படம் தயாரித்தல்.போட்டோகிராபி,அஸ்ட்ரானமி விளையாட்டுக்கள் ஆகிய தலைப்புகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி செயலாளர் ஏ.பி செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி நிர்வாகிகள் சாந்தி, சிந்தியா, நித்யா,ராஜ ராஜேஸ்வரி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில தலைவர் ரமேஷ் மாநாட்டின் நோக்க உரையாற்றினார்.
இந்திய ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் இளைஞர் மாநில மாநாட்டினை துவக்கி வைத்து பேசினார். முன்னதாக இளைஞர்களிடம் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் கலந்துரையாடல் செய்தார்.
இதில் பெங்களூரு இந்திய வான் இயற்பியல் நிறுவன விஞ்ஞானிகள், நிருஜி மோகன் ராமானுஜம், கிரிஸ்பின் கார்த்திக்,டாஸ் மாநில பொதுச் செயலாளர் மனோகர்,5000 இடங்களில் அஸ்ட்ரானமி நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மாநில மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் உதயன் நன்றி கூறினார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாநாட்டின் நிறைவு விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை பங்கேற்று உரையாற்றுகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்எல்ஏ விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
சனி 16, ஆகஸ்ட் 2025 5:38:53 PM (IST)

அமெரிக்க வரி உயர்வால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு: பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சனி 16, ஆகஸ்ட் 2025 5:29:16 PM (IST)

தூத்துக்குடியில் ஆறாவது புத்தகத் திருவிழா: பொது மக்களுக்கு ஆட்சியர் க.இளம்பகவத் அழைப்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 5:17:52 PM (IST)

தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சீமானுடன் சந்திப்பு : போராட்டங்களுக்கு ஆதரவு கோரினர்
சனி 16, ஆகஸ்ட் 2025 3:52:07 PM (IST)

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சனி 16, ஆகஸ்ட் 2025 12:22:24 PM (IST)

பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை மூடிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!
சனி 16, ஆகஸ்ட் 2025 11:53:39 AM (IST)
