» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்? - தமிழக அரசு விளக்கம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:25:56 PM (IST)
பள்ளி வளாகத்தை மாணவிகள் சுத்தம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை கொண்டு பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது சமூக ஆர்வலர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: இது முற்றிலும் தவறான தகவல். கள்ளக்குறிச்சி மாவட்டம் மூரார்பாது அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாவில் பொதுமக்களால் பூச்செடிகள் வழங்கப்பட்டன. அவற்றை ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தூய்மை பணியாளர் உதவியுடன் சுற்றுச்சூழல் மன்ற மாணவியர் நட்டனர்.
இதற்காக ‘தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதனை அடையாளம் தெரியாத நபர் வீடியோ எடுத்து மாணவிகள் தூய்மைப்பணி செய்வதாக தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். வதந்திகளை நம்பாதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் : 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:36:49 PM (IST)

அஜித் படத்தின் படத்தில் அனுமதியின்றி பாடல் வழக்கு தொடர்ந்த இளையராஜா!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:24:54 PM (IST)

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:08:04 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:47:17 PM (IST)

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:59:59 AM (IST)
