» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு : போலீஸ் விசாரணை
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:38:51 PM (IST)
நித்திரவிளை அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள பொன்னுரிக்கி வீட்டை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மனைவி லீலாபாய் (77).இவர் நேற்று முன்தினம் மாலையில் களியக்காவிளை செல்வதற்காக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தாக கூறப்படுகிறது. பின்னர், களியக்காவிளை வந்ததும் பஸ்சில் இருந்து லீலாபாய் இறங்கினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி நகை அபேஸ் செய்தது தெரியவந்தது. பின்னர், இதுபற்றி லீலாபாய் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் : 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:36:49 PM (IST)

அஜித் படத்தின் படத்தில் அனுமதியின்றி பாடல் வழக்கு தொடர்ந்த இளையராஜா!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:24:54 PM (IST)

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:08:04 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:47:17 PM (IST)

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:59:59 AM (IST)
