» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:51:30 PM (IST)

தமிழகத்தில் 70 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள்  டிஎன்பிஎஸ்சி  இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தோ்வு கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 44 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 294 போ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 போ் தோ்வு எழுதினா்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. https://tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். இதில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வு சென்னையில் வருகிற டிசம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக தேர்வர்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்த டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory