» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நலத்திட்டங்களுக்கு மட்டுமே கடன் தொகையைச் செலவிடுவது சரியல்ல : நிர்மலா சீதாராமன்
வியாழன் 25, ஜூன் 2026 4:55:55 PM (IST)
கடன் வாங்குவதில் தவறில்லை என்றாலும், அந்த நிதியைக் கொண்டு உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டுமே தவிர, நலத்திட்டங்களுக்கு மட்டுமே கடன் தொகையைச் செலவிடுவது பொருளாதார ரீதியாகச் சரியல்ல என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது, மத்திய அரசுடன் இணைந்து செயல்படப் போவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளதை அவர் வரவேற்றார். முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலும் கூட தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிதி அனைத்தும் முறையாகக் கொடுக்கப்பட்டது.தற்போது தமிழ்நாட்டிற்கான மத்திய அரசின் நிதி நிலுவை எதுவுமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான நிதியைக் கடன் வாங்குவதில் எவ்விதத் தவறோ அல்லது குறையோ இல்லை; ஆனால், அவ்வாறு பெறப்படும் கடன் தொகையை நீண்ட காலப் பலன் தரும் அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்க மட்டுமே செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கடன் வாங்கும் நிதியைக் கொண்டு கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இத்தகைய முதலீடுகள் மூலமே ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் நல்லதொரு நேர்மறையான தாக்கம் ஏற்படும் என்றும் அவர் விவரித்தார். நாம் கடன் வாங்கி என்ன செய்கிறோம் என்பதே முக்கியம் என்று சுட்டிக்காட்டிய அவர், கடன் பெற்று அதனை அன்றாட நலத்திட்ட உதவிகளுக்கு மட்டுமே செலவிடக் கூடாது என்றும், மாநிலத்தின் வருவாய் அதிகரித்துப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் காலங்களில் மட்டுமே இத்தகைய நலத்திட்ட உதவிகளைச் தாராளமாகச் செய்யலாம் என்றும் தனது பேட்டியில் அறிவுறுத்தினார்.
மேலும், சட்டசபையில் அரசியல் விமர்சனங்கள் வைக்கப்படுவது இயல்பானது என்றும், அங்கு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களது கருத்துகளைப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஊழல் பட்டியல்: தவெக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த அண்ணாமலை!
வெள்ளி 26, ஜூன் 2026 5:33:39 PM (IST)

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?: மு.க.ஸ்டாலின் பதில்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:16:32 PM (IST)

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)

தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் ஆய்வு டெண்டர் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:55:22 PM (IST)

சிகிச்சையில் இருந்த இளம்பெண் பலி: அமோனியா வாயு கசிவு விபத்து உயிரிழப்பு 14 ஆக உயர்வு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:45:57 PM (IST)

சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:21:30 PM (IST)


