» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் மீது ஆட்டோ மோதி விபத்து : சிறுமி பரிதாப சாவு - தந்தை படுகாயம்!

புதன் 24, ஜூலை 2024 8:21:48 AM (IST)

நெல்லை அருகே மோட்டார் பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் தந்தையுடன் சென்ற 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்..

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டி ஊரைச் சேர்ந்தவர் முகம்மது மைதீன் (34). ஓட்டல் தொழிலாளி. இவருடைய மனைவி பக்கீரம்மாள். இவர்களுடைய மகன் முகமது பயாஸ், மகள் நஸ்ரின் பாத்திமா (8). இவள் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று முன்தினம் இரவு முகம்மது மைதீன் தனது மகள் நஸ்ரின் பாத்திமாவுடன் மோட்டார் சைக்கிளில் மானூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மானூர் - தெற்குப்பட்டி ரோட்டில் சென்றபோது எதிரே மானூர் குப்பனாபுரத்தைச் சேர்ந்த அண்ணாவிமுத்து மகன் முகேஷ்குமார் (24) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தந்தை, மகள் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நஸ்ரின் பாத்திமா படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். முகம்மது மைதீனுக்கு கால் முறிந்து பலத்த காயங்களுடன் ரோட்டில் கிடந்தார்.அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்தில் பலியான சிறுமி நஸ்ரின் பாத்திமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ மோதி சிறுமி பலியான சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory