» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத் தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்

புதன் 24, ஜூலை 2024 10:08:15 AM (IST)

திருநெல்வேலியில் வருகிற 26ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 26.07.2024 அன்று காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை- நகல், ஆதார் அட்டை - நகல், தனித்துவமான மாற்றுத்திறனாளிகள் அட்டை (UDID) ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory