» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆன்லைன் ஜாப் என்று கூறி ரூ.55 லட்சம் மோசடி : குஜராத்தைச் சேர்ந்த 2பேர் கைது!

சனி 27, ஜூலை 2024 10:07:01 AM (IST)

தூத்துக்குடியில் ஆன்லைன் ஜாப் என்று கூறி சுமார் ரூ.55லட்சம்  மோசடி செய்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 2பேரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் டெலிகிராம்- ல் (Telegram App) Online job மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற செய்தியை அனுப்பி அதில் அவர்கள் கூறிய L&T construction sites and buildings க்கு ரிவ்யூ (Review)கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மேற்படி நபர், மர்ம நபர்கள் கூறியபடி ரிவ்யூ கொடுத்து சிறிதளவு பணத்தையும் ஈட்டியுள்ளார். 

பின்னர் அந்த மர்ம நபர்கள் மேற்படி நபரை  தொடர்ந்து தொடர்பு கொண்டு www.intecct.net என்ற இணையதளத்தில் முதலீடு செய்வதன் மூலமாகவும் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளனர். அதனை நம்பி மேற்படி நபர், மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு பணம் அனுப்பும் செயலிகள் மற்றும் வங்கியின் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாக பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய் 55,49,916/- பணத்தை முதலீடு செய்துள்ளார்.

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி நபர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். மேற்படி பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர்களான சந்திரேஷ் பாய் ரவிஜ்பூ மகன் ஜேய் சவாலியா (24) மற்றும் அசோக் பாய் மகன் மிலப் தக்கர் (22) ஆகியோர் மேற்படி நபரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் கடந்த 23.07.2024 அன்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைத்து மேற்படி 2 மோசடி எதிரிகளையும் கைது செய்து சூரத் நகர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு Transit Warrant பெற்று பின்னர் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு இன்று (26.07.2024) தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி வழக்கில் எதிரிகளை கண்டுபிடித்து குஜராத் மாநிலம் சென்று கைது செய்த சைபர் குற்றப் பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.


மக்கள் கருத்து

TAMILANJul 27, 2024 - 12:03:03 PM | Posted IP 162.1*****

TAMILNADU POLICE BIG SALUTE.HATSOFF

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory