» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மைனாரிட்டி பாஜக அரசின் பட்ஜெட்டால் மக்களுக்கு பயனில்லை - கனிமொழி தாக்கு!

சனி 27, ஜூலை 2024 11:57:32 AM (IST)



மைனாரிட்டி பாஜக அரசு தாக்கல் செய்தள்ள பட்ஜெட்டால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார். 

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை பாரதிய ஜனதா அரசு புறக்கணித்ததாக கூறி தமிழக முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசும்போது "பாஜகவினர் காதுகாளில் தமிழ்நாட்டில் என்ன குரல் எழும்புகின்றது என்று கேட்கும் நிலைதான் உள்ளது. எனவே முதல்வர் அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் டெல்லியில் இருக்ககூடியவர்கள் காதுகளில் கேட்டு அங்கு இருக்கக்கூடிய அரசின் அடிதளத்தை அசைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

மைனாரிட்டி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த அரசு தற்போது மைனாரிட்டி அரசாங்கமாக அமர்ந்துள்ளது. இவர்கள் தொடர்ந்து ஆட்சி நடத்த வேண்டும் என்றால் பீகார், ஆந்திரா தலைவர்கள் ஆதரவு வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கி உள்ளார்கள். ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் திமுகவின் போராட்ட போர் குணத்தை யாராலும் மாற்ற முடியாது.

இந்தியாவில் இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளதாக நினைத்து பாஜக பட்ஜெட்டை தயாரித்து உள்ளனர். பீகாராக இருக்கட்டும் ஆந்திராவாக இருக்கட்டும் இரண்டு மாநிலங்களுக்கும் நிதி அளித்து அந்த மாநிலங்களை முன்னேற்றுவதில் எங்களுக்கு எந்த கருத்துக்களும் கிடையாது. ஆனால் முதல்வர் சொன்னதுபோல பணத்தை அறிவித்து உள்ளனர். ஆனால் வருமா வராதா என்று யாருக்கும் தெரியாது. 

எந்த நிதி நெருக்கடி வந்தாலும் அதை செயல்படுத்தி காட்டிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தங்களுக்கு வாக்களிக்காத மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி உள்ளது. பாஜக பட்ஜெட்டால் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அம்பானி, அதானி போன்ற பெரிய முதலாளிகளுக்கு மட்டுமே பயனாக உள்ளது. 

சாதாரண, சாமானிய கிராமபுற மக்களை பற்றி கவலைபடகூடிய ஆட்சியை விரைவில் உருவாகும். தேர்தல் நேரத்தில் 10-முறை தமிழகம் வந்த பிரதமர் பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு எந்த அறிவிப்பையும் அளிக்கவில்லை. தமிழ்நாடு மக்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசை விரைவில் பதவியிலிருந்து இறக்கி காட்டுவோம் வேண்டும் என்றார்.



ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டப்பிடாரம் சண்முகையா, விளாத்திகுளம் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory