» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் : ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தீர்மானம்!

சனி 27, ஜூலை 2024 3:17:25 PM (IST)



கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க முப்பெரும் விழாவில் கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு, நிர்வாகிகளுக்கு பாராட்டு, உறுப்பினர் அட்டை வழங்குதல் உள்பட முப்பெரும் விழா சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் கற்குவேல் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கருப்பசாமி, லட்சுமி, சங்கரலிங்கம், கசாலி மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கோவில்பட்டி ஒன்றிய தலைவர் சிவபாலன் அனைவரையும் வரவேற்றார் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கலந்து கொண்டு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தும், கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்கிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. இதில் மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், மாநிலத் துணைத்தலைவர் பழனிச்சாமி, மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், மாநில பொருளாளர் மகேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்புராஜ், லிங்கேஸ்வரி, மணி, ரத்தினவேல், குமார் உள்பட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் பாலகுமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

துரைJul 27, 2024 - 10:46:08 PM | Posted IP 162.1*****

என் உயிர் தலைவா என்றும் உங்கள் வழியில் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory