» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பள்ளி கல்வித்துறை அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
சனி 14, செப்டம்பர் 2024 3:27:51 PM (IST)
பாளையங்கோட்டையில் பள்ளி கல்வித்துறை அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை அறிவிப்பை மீறி பாளையங்கோட்டை குழந்தை ஏசு பெண்கள் மேல்நிலை பள்ளி இன்று (14-09-24) சனிக்கிழமை பள்ளி உண்டு என அறிவித்துள்ளது. இதற்கு பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிறுவனர்/தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.