» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: 703 வழக்குகள் தீர்வு

திங்கள் 16, செப்டம்பர் 2024 7:59:07 AM (IST)



தென்காசியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 703 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது. 

திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்  சாய் சரவணன்  வழிகாட்டுதலின்படி தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி  ராஜவேல்  தலைமையில் தென்காசி நீதிமன்ற வளாகத்தில் வைத்து மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி வட்ட சட்ட பணி குழுவின் தலைவர் (பொறுப்பு)  மாரீஸ்வரி,  முன்னிலை வகித்தார் . இதில் மதுரை மாவட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தங்கக் கனி, தென்காசி  முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி  ராஜேஷ்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற   நீதிபதி பொன் பாண்டி மற்றும் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள்,  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி மக்கள் நீதிமன்றத்தில்  தென்காசி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள  இட பிரச்சனை மற்றும் வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் 50, மோட்டார் வாகன விபத்து சம்பந்தமான வழக்குகள் 25, நிறைவேற்றுதல் மனு  வழக்குகள்  11, மேல் முறையீடு  வழக்குகள் 2, வாகன அபராத தொகை வழக்குகள் 537, காசோலை மோசடி வழக்குகள் 14, திருமண தகராறு சம்பந்தமான வழக்குகள் 4, குற்றவியல் வழக்கு 1, நீதிமன்றத்திற்கு முன் வரும் வழக்குகள் 59  ஆக மொத்தம் 703 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory