» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
செப்.20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்!
திங்கள் 16, செப்டம்பர் 2024 12:55:26 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் செப்.20ல் நடைபெறவுள்ளது என்று ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் செப்டம்பர் 2024-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.09.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளார்கள். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.