» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூய சவேரியார் கல்லூரியில் எக்செல் தொழில் நுட்ப பயிற்சி பட்டரை

திங்கள் 16, செப்டம்பர் 2024 7:54:53 AM (IST)



நெல்லை தூய சவேரியார் கல்லூரியின் தரவு அறிவியல் துறை சார்பாக உயர்தர மைக்ரோசாப்ட் எக்செல் தொழில்நுட்ப பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது.

தொடக்க நாளில் அறிவியல் துறையின் பாடல் குழுவினர் துவக்க பாடல் பாடினர். துறைத்தலைவர் டாக்டர்.நடராஜன் வரவேற்புரை வழங்க,கல்லூரி அதிபர் தந்தை அருள் முனைவர் ச.இன்னாசிமுத்து (சே.ச) மற்றும் செயலர் தந்தை ஞா.புஷ்பராஜ் (சே.ச) ஆசியுடன் விழா தொடங்கியது. கல்லூரி முதல்வர் அருள் முனைவர் டாக்டர். காட்வின் ரூஃஸ் (சே.ச) தலைமை தாங்க, துறை பேராசிரியர் முனைவர் டாக்டர். சுனில்ராஜ் பயிற்சிபட்டரை முக்கியத்துவம் குறித்து விளக்க உரை வழங்கினார்.

பயிற்சி பட்டறையில் 140 க்கும் மேற்பட்ட சவேரியார் கல்லூரியின் பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். நிறைவு நாளில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கபட்டன. கல்லூரி இணை முதல்வர் டாக்டர்.லூர்துசாமி வாழ்த்துரை வழங்க, டாக்டர் சத்யா நன்றியுரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை மாணவர் பேரவை தலைவர் கெவின் செல்வா செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory