» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் 17ஆம் தேதி மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
சனி 14, செப்டம்பர் 2024 3:57:42 PM (IST)
மிலாடி நபியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 17ஆம் தேதி மதுபானக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் கார்த்திகேயன் உததரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மிலாடி நபியை முன்னிட்டு 17.09.2024 (செவ்வாய்க்கிழமை) திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL3 மற்றும் FL.3A, உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 17.09.2024 (செவ்வாய்க்கிழமை) மிலாடிநபியை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.