» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மண்டல தடகளப் போட்டிகள்: பதக்கங்கள் குவித்த ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி!
சனி 14, செப்டம்பர் 2024 4:10:12 PM (IST)
சுரண்டையில் நடைபெற்ற மண்டல தடகளப் போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவிகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை எஸ் ஆர் பள்ளியில் எம்எஸ்எஸ்சி மண்டல-2 தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவி கே.மாதுரி 400 மீ ஓட்டத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மேலும் இம்மாணவி 800 மீ ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.
இப்பள்ளி மாணவி பி.ஜோதி ப்ரியா 200 மீ ஓட்டத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். மாணவர் எம்.சகரியா நீளம் தாண்டுதலில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், 100 மீ ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றார். மாணவி பி.லக் ஷனா குண்டு எறிதலில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி சீனியர் முதல்வர் ஜெயஜோதி ப்ளாரன்ஸ், முதல்வர் சௌம்யா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்