» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கொலை வழக்கின் குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!
சனி 14, செப்டம்பர் 2024 4:16:25 PM (IST)
பாவூர்சத்திரம் கொலை வழக்கின் குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான ராமநாதபுரம் வட்டாலூர் கிழக்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருண் பாஸ்கர் (25) மற்றும் வடக்கு தெருவை சேர்ந்த அமல்ராஜ் மகன் முத்துக்குமார் (25) ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பாஸ்கர், முத்துக்குமார் ஆகிய இருவரும் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.