» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொலை வழக்கின் குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சனி 14, செப்டம்பர் 2024 4:16:25 PM (IST)

பாவூர்சத்திரம் கொலை வழக்கின் குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான ராமநாதபுரம் வட்டாலூர் கிழக்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருண் பாஸ்கர் (25) மற்றும் வடக்கு தெருவை சேர்ந்த அமல்ராஜ் மகன் முத்துக்குமார் (25) ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பாஸ்கர், முத்துக்குமார் ஆகிய இருவரும் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory