» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் பிரதான சாலையில் அபாய குழி : வாகன ஓட்டிகள் அவதி
சனி 18, ஜனவரி 2025 10:22:39 AM (IST)
தூத்துக்குடியில் பிரதான சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள குழியை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியே செல்லும் வழியில் மேம்பாலம் அருகில் நடுரோட்டில் ஒரு ராட்சச பள்ளம் உள்ளது. மேலும், அதன் மேல் ஒரு பெரிய சிமெண்ட் குழாயை நட்டு வைத்துள்ளனர்.
இதனால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து எட்டயபுரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பஸ்ஸை வலது பக்கமாக திரும்பி செல்லும் போது பாலத்தில் இருந்து வரும் வாகனங்களுடன் மோதி விபத்துகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழியை மூட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
SrrriJan 20, 2025 - 11:43:40 PM | Posted IP 162.1*****
செயல் படாத மாநகராட்சி
பள்ளத்தில் விழுந்த வன்Jan 18, 2025 - 06:12:59 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி புதியபேருந்துநிலையத்தில்இருந்துபுறப்படும்அனைத்துபேருந்துகலும்ஆம்னிபேருந்தும்அந்தபள்ளத்தைகடந்துதான்செல்கிறதுபள்ளிகுழந்தைகள்பெரியவர்கள்அனைவரும்பயத்துடன்கடந்துசெல்கிறனர்
சண்முகம்Jan 18, 2025 - 06:09:14 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி முக்கிய சாலையில் பெரும்புள்ளி சாலை கட்டமைக்க டெண்டர் எடுத்த நிறுவனம் கட்டமைப்பு தரம் மற்றும் பணி கள ஆய்வை அங்கீகரித்த அரசு பொறியாளர்கள் நிர்வாகிகள் வசம் குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் மற்றும் பழுது நீக்கியபுதிய கட்டுமான மதிப்பீட்டு தொகை பெற வேண்டும்.
ஓட்டு போட்ட முட்டாள்Jan 18, 2025 - 12:53:41 PM | Posted IP 172.7*****
முதலை அமைச்சர் ஊருக்கு வந்தால் மட்டும் இரவும் பகலும் பாராமல் திடீர் சாலையை சரி பண்ணுவார்களாம். அதான் காமராஜர் காலேஜ் ரோட்டில் போன மாதம் முதலை அமைச்சர் வரும்போது தான் நல்ல இருக்கு. அவர் போன பிறகு மாநகராட்சி துட்டு அதிகாரிகள் எல்லாம் கோமால இருப்பானுங்க.
JeorgeJan 18, 2025 - 10:53:54 AM | Posted IP 162.1*****
விடியா அரச
VijayanJan 21, 2025 - 05:19:47 AM | Posted IP 162.1*****