» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடல் அரிப்பிலிருந்து திருச்செந்தூர் கோவிலை காக்க வலியுறுத்தி இந்து முன்னணி கூட்டு பிரார்த்தனை!

சனி 18, ஜனவரி 2025 11:25:34 AM (IST)



கடல் அரிப்பிலிருந்து திருச்செந்தூர் கோவிலை காக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. 

திருச்செந்தூரில் கடல் அரிப்பு ஏற்பட்டு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடற்கரையில் சுமார் 7 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலை காத்திட வலியுறுத்தி நெல்லை கோட்ட இந்து முன்னணியின் சார்பில் நேற்று மாலை கூட்டுப் பிரார்த்தனை செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள தூண்டுகை விநாயகர் கோவில் அருகே விநாயகர் அகவல் பாராயணம் மற்றும் சூடம் ஏற்றி விநாயகரிடம் வழிபாடு செய்யப்பட்டது. நிகழ்விற்கு மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில செயலாளர் கா. குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பெ.சக்திவேலன், உட்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Om MurugaJan 19, 2025 - 01:20:44 PM | Posted IP 162.1*****

Om Muruga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory