» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 3வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை!
செவ்வாய் 27, மே 2025 11:18:16 AM (IST)
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தமிழகத்தில் தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவார பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று காலையிலும் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் தொடர் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவியில் பாதுகாப்பு ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளையும் மூழ்கடித்தவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
புதன் 28, மே 2025 12:09:44 PM (IST)

திருநெல்வேலியில் மே 29ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
செவ்வாய் 27, மே 2025 4:14:11 PM (IST)

வினாத்தாள் கசிவு? மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வு ஒத்திவைப்பு!
செவ்வாய் 27, மே 2025 11:36:45 AM (IST)

தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் : சரத்குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 27, மே 2025 10:37:36 AM (IST)

சுய தொழில் தொடங்குவதற்கு ரூ.20 இலட்சம் வரை வங்கிக்கடன்: விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 26, மே 2025 12:02:41 PM (IST)

குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை!
திங்கள் 26, மே 2025 10:47:40 AM (IST)
