» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காயல்பட்டினம் பகுதியில் கடல்நீர் உட்புகும் கால்வாய் அமைவிட வரைபடம் கண்டுபிடிப்பு!
சனி 20, செப்டம்பர் 2025 11:48:07 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் பனையூர் போன்று காயல்பட்டினம் பகுதியில் சுமார் 5.4கி.மீ விட்டம் கொண்ட கடல்நீர் உட்புகும் கால்வாய் உடன் அமைந்திருந்த குளத்தின் அமைவிடம் வரைபடம் வாயிலாக கண்டறிய பட்டுள்ளது.
இதுகுறித்து வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது: திரு.இராபர்ட் ஓரம் வரைந்த 1778ம் ஆண்டு இராணுவப் பரிவர்த்தனை வரைபடத்தினை அட்ச ரேகை, தீர்க்க ரேகை அடிப்படையில்(DMS Method) தூரங்கள் கணக்கீட்டு(Great Circle distance between two DMS co-ordinates) முறையில் பகுப்பாய்வு செய்ததில் தூத்துக்குடி மாவட்டம், தெற்கு குளத்தூர் அருகே உள்ள பனையூர் பனையூர் குளத்தை விட பெரியது(5.4கி.மீ விட்டம்) கொண்டதாக கடலில் இருந்து 9.5கி.மீ தூரத்தில் நாலுமாவடி - புதுக்குடி பகுதிகளை மையமாக வைத்து இருந்து உள்ளது புலனாகிறது.
(செயற்கை கோள் வரைபட பார்வைக்கு இணைப்பு: https://earth.google.com/earth/d/1LnThLG7wR9f50m_1o7SiJ4zaMzyYWhIY?usp=sharing) இந்த நதியின் வரைபடம் வாயிலாக பார்த்தால், ஆத்தூர் வழித்தடம் பின்னர் உருவான உண்மை புலனாகும். இதனால் தான் ஆத்தூர் பகுதியில் இன்றுவரை அதிக அளவிலான தொன்மங்கள் மற்றும் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது வரலாற்று சான்றுகள் ஆகும்.
இந்த குளத்தின் உட்பகுதியில் புதுக்குடி, அருஞ்சுனனை ஆகிய பகுதிகளும், கிழக்கு கரை பகுதியில் மூலக்கரை, புதுக்குளம் போன்ற பகுதிகளையும், தென்கரையில் மூலைப்பொழி, சோனகர்விளை என்ற பகுதிகளையும் நம்மால் காணமுடிகிறது. இந்த குளத்தின் பகுதியின் மேற்கே தான் மண்ணூர் என வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட தேரிக்காடு உள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும். வடக்கு கரை பகுதியில் வரண்டியவேல், அங்கமங்கலம் போன்ற பகுதிகளையும் காணமுடிகிறது

குறிப்பாக காயல்பட்டினம் சிங்கித்துறை கடற்கரை பகுதிக்கு வடக்கே இருந்து மேற்கு நோக்கி சாகுபுரம் வழியாக கடல்நீர் கால்வாய் வழித்தடத்தின் எச்சங்களை இன்றும் நம்மால் காணமுடிகிறது. எனவே தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இன்றைய அக்காசாலை பகுதியில் கொற்கை எனப்படும் துறைமுகம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை எனலாம்.
இத்தகைய கீழக்கரை, கீழ் பட்டினம் (பட்டினம் மருதூர்), காயல்பட்டினம் போன்ற மூன்று பகுதிகளில் முன்பு காணப்பட்ட மிகப்பெரிய குளங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பகுதிதான் கொற்கை என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் இத்தகைய அமைப்பில் வேறு எந்தப் வணிக பகுதிகளிலும் குளங்களை காணப்படவில்லை என்பது முத்து விளைவிக்கும் வித்தையின் மூலக்கூறாக இந்த குளங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மட்டுமே அமைந்திருக்க வேண்டும் எனலாம் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை : போலீசார் விசாரணை
சனி 20, செப்டம்பர் 2025 12:39:46 PM (IST)

அரசு பள்ளி மாணவர்கள் நமது பெருமையின் அடையாளம் : முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சனி 20, செப்டம்பர் 2025 12:22:29 PM (IST)

நிமிர்ந்து நில் – தொழில்முனைவோர் புத்தாக்க செயல்பாடுகள் : ஆட்சியர் கலந்துரையாடல்
சனி 20, செப்டம்பர் 2025 10:48:44 AM (IST)

காளை மாடு எட்டி உதைத்ததில் வாலிபர் பலி: சுசீந்திரத்தில் சோகம்!
சனி 20, செப்டம்பர் 2025 10:21:33 AM (IST)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 20, செப்டம்பர் 2025 8:25:26 AM (IST)

அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் பயிற்சி : நேரடி மாணவர் சேர்க்கை
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:35:40 PM (IST)
