» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை : போலீசார் விசாரணை

சனி 20, செப்டம்பர் 2025 12:39:46 PM (IST)

குலசேகரன்பட்டினத்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை வண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் சுப்பையா மனைவி பார்வதி (23), இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்திக் மகன் வேலுச்சாமி (28). இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்களாம். இந்நிலையில் இருவரும் இன்று காலை நெல்லையில் இருந்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்தனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பின்னர் இருவரும் ஏற்கனவே தயாராக வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரப்பட்டினம் போலீசார் அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் இரண்டு பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதையடுத்து 2பேரின் உடல்களும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதல் ஜோடியான இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory