» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ரூ.50,000 மானியம் ஆட்சியர் தகவல்!

சனி 31, ஆகஸ்ட் 2024 5:38:37 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ரூ.50,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கைம்பெண்கள் மற்றம் ஆதரவற்ற மகளிர்நல வாரியத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற வலைப்பாட்டின் (Web Application) மூலம் தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை எளிய கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளியமுறையில் பெற, மேற்படி இளையதளம் மூலம் நேரடியாகவும் அல்லது அவர்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் தங்களின் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம்.

அவ்வாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சுயதொழில் செய்ய விரும்பும் நபர்கள் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரம், நடமாடும் சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைக் கடைகள் போன்ற சுயதொழில்கள் மூலம் நிலையான வருமானம் பெற, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்நல வாரியத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.50,000/- வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

தகுதிகள்

1. வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும்

2. வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

3. 25 – 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

4. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்

5. ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியுடைவராவர்

விதிமுறைகள்: கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்நல வாரியத்தின் மூலம் மானியம் பெறுவதற்கு அளிக்கப்படும் விண்ணப்பத்துடன் பின்வரும் சான்றுகளை இணைத்து விண்ணப்பதாரர்கள் மாவட்ட சமூகநல அலுவலர், திருநெல்வேலி அவர்களிடம் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் என்பதற்கான சுய அறிவிப்பு சான்று (Self Declaration Certificate)

2. வருமானச் சான்று (Income Certificate)

3. குடும்ப அட்டை நகல் (Ration Card Xerox)

4. ஆதார் அட்டை நகல் (Aadhaar Card Xerox)

5. தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்று (Any Proof for Current Resident Address)

மேலும், தகவல்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/107, சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, திருநெல்வேலி -627002 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory